காணாமல் போனோர் குறித்த விசாரணை அறிக்கை நிறைவு – மெக்ஸ்வல் பரணகம

328 0

maxwellகாணாமல் போனோர் குறித்த விசாரணை அறிக்கை நிறைவு செய்திருப்பதாக, பரணகம ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, காணாமல் போன சுமார் 400 பேர் தற்போது எங்கு இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தங்களுக்கு வழங்கப்பட்ட காலம் போதாமை காரணமாக, முழுமையான விசாரணைகளை நிறைவு செய்ய முடியவில்லை.

இந்த விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இது விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.