“தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்திக் கூலியை ரூ.6.50-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற போராட்டத்துக்கு ஆதரவளித்த விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அராஜகத்தின் உச்சம்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புக்கான உற்பத்திக் கூலியை ரூ.6.50-லிருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமெனப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், கடமையைக் கைகழுவி விட்டு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதிலும், இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த விவசாயிகள் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அராஜகத்தின் உச்சம்.

