மோசுலில் அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலியானமை உறுதி

245 0

ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படையினர் நடத்தியத் தாக்குதலில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலியானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமார் 500 கிலோ எடைகொண்ட குண்டுகள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தடன் மேலும் பல குண்டுகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கி இருந்த கட்டிடங்களுக்கு வைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.

இந்த தாக்குதலில் இரண்டு ஐ.ஸ். தீவிரவாதிகளின் ஸ்னைப்பர்தாரிகளும், 105 பொதுமக்களும் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் வெளியிடப்படாத விசாரணை அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.