தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள். 31.12.2025

40 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 31.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முறுகண்டி – இந்துபுரம் கிராமம் கனகாம்பிகை குளத்தின் கீழ்பகுதியில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் பேராதரவோடு அரிசி, மா, பருப்பு, சோயா, கடலை, சீனி, தேயிலை, பனடோல், மற்றும் சவர்க்காரம் அடங்கிய உலருணவுப் பொதியும் வயோதிபர் மற்றும் சிறுவர்களுக்கான நுளம்புவலை போர்வை(பெட்சீட் ) என்பன 20 குடும்பங்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. இப்பேருதவிகளை வழங்கிய பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு முறுகண்டி இந்துபுரம் பிரதேச மக்கள் தங்களுடைய மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதோடு, பல குடும்பங்கள் இன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தொடர்ந்துவரும் காலங்களிலும் புலம்பெயர் தமிழ் உறவுகளின் ஆதரவை கேட்டு நிற்கின்றனர்.