தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – சுவிஸ் 3012.2025

41 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 30/12/2025 அன்று திருகோணமலை மாவட்டத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 7பேருக்கு சுவிஸ்வாழ் தாயக உறவுகளால் இயற்கைப் பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை,பிஸ்கற், பால்மா, சவர்க்காரம், சலவைத்தூள் மற்றும் பனடோல் என்பன உள்ளடங்குகின்றன.இப்பேருதவியை வழங்கிய சுவிஸ்வாழ் தாயக உறவுகளிற்கு பயனாளிகள், தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.