தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி வாழ் தமிழ்மக்கள்.

54 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 23/12/2025 அன்று யேர்மனி நாட்டில் உள்ள தாயக தமிழ் உறவுகளின் பேராதரவோடு கிளிநொச்சி மாவட்டத்தில் புதிமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த 31 குடும்பங்களுக்கு அரிசி, மா, பருப்பு, சோயா, கடலை, சீனி, தேயிலை, சவர்க்காரம் என்பன அடங்கிய உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் உலருணவுப் பொதிகளை வழங்கிய யேர்மனி நாட்டின் தாயக தமிழ் உறவுகளுக்கு கிளிநொச்சி மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.