யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கோகுலன் சுரேகா வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்றையதினம்(23.12.2025)மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீதியின் சில பிழைகளை சுட்டிக்காட்டிய போது, தவிசாளர் அவதூறு வார்த்தைகளால் பேசி தன்னை தலைக்கவசத்தால் தாக்க முற்றப்பதாக குறித்த பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம்(22) தினம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் கோகுலன் சுரேகா முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

