தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- தமிழலயம் முன்ச்ரர் யேர்மன் உறவுகளின் உதவித்திட்டம்.
அம்பாறை மாவட்டம்
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 15/12/2025 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பட்டை,அக்கரைப்பற்று கோளாவில்,பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற தொழில் வாய்ப்பில்லாத 100 குடும்பங்களிற்கு தமிழலயம் முன்ச்ரர் யேர்மனிதாயக வாழ் உறவுகளால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி கோதுமைமா,சீனி, தேயிலை,பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.பயன்பெற்ற மக்கள் அனைவரும் யேர்மன் வாழ் தாயக உறவுகளிற்கு நன்றி தெரிவித்தனர்.

















