தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மன் முன்ச்சர் தமிழாலயம்

30 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 14/12/2025 அன்று “தாயகம் நோக்கிய பேரிடர்கால உதவிக்கரம் “எனும் தொனிப் பொருளில் ஜேர்மன் நாட்டில் உள்ள  Thamilalayam munster(தமிழாலயம் முன்ச்ரர்)என்கின்ற அமைப்பினரின் நிதிப்பங்களிப்போடு, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புன்னைநீராவி, நாதன்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50(ஐம்பது ) குடும்பங்களுக்கு அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பிஸ்கற் மற்றும் பனடோல் என்பன அடங்கிய உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கிய Thamilalayam Munster(தமிழாலயம் முன்ச்ரர்)அமைப்பினருக்கு கிளிநொச்சி புன்னைநீராவி, மற்றும் நாதன்திட்டம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.