தேமுதிக சார்பில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
தேமுதிக சார்பில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் பாசார் கிராமத்தில் நடத்தப்படும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில், “தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணி சகோதரிகளுக்கும், சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கும் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகின்ற ஜனவரி 9 அன்று மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். எனவே இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

