ரஷ்யா – உக்ரைன் மோதல் 3-ம் உலகப் போராக மாறும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

6 0

ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்​கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறார். இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி​யுடன் அவர் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி உள்​ளார். உக்​ரைன் போரை நிறுத்த 28 அம்ச திட்​டத்தை அதிபர் ட்ரம்ப் கடந்த நவம்​பர் மாதம் முன்​மொழிந்​தார்.

உக்​ரைனின் கிரிமியா பகுதி கடந்த 2014-ம் ஆண்​டில் ரஷ்​யா​வுடன் இணைக்​கப்​பட்​டது. இதை, ரஷ்ய பகு​தி​யாக உக்​ரைன் அரசு அங்​கீகரிக்க வேண்​டும். ரஷ்ய மொழி பேசும் மக்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கும் டொனெட்​ஸ்க், லுஹான்​ஸ்க் பகு​தி​களை ரஷ்​யா​விடம் முழு​மை​யாக ஒப்​படைக்க வேண்​டும்.

நேட்டோ அமைப்​பில் உக்​ரைன் இணைக்​கப்​ப​டாது. ஆனால் உக்​ரைனின் பாது​காப்​புக்கு அமெரிக்கா முழு உத்​தர​வாதம் வழங்​கும். அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான 100 நாட்​களில் உக்​ரைனில் பொதுத்​தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும் என்பன உள்​ளிட்ட 28 அம்ச திட்​டத்தை அதிபர் ட்ரம்ப் முன்​வைத்​துள்​ளார்.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: ரஷ்​யா, உக்​ரைன் போரில் கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும் 25,000 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இதில் பெரும்​பாலானோர் ராணுவ வீரர்​கள் ஆவர். போரை தடுத்து நிறுத்த வேண்​டும். உயி​ரிழப்​பு​களை தடுக்க வேண்​டும் என்று அதிதீ​விர​மாக முயற்சி செய்து வரு​கிறேன்.

ரஷ்​யா, உக்​ரைன் மோதல் தொடர்ந்து நீடித்​தால் 3-ம் உலகப் போர் ஏற்​படக்​கூடும். இதை தடுக்க தீவிர முயற்சி செய்​கிறேன். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்​தித் தொடர்​பாளர் கரோலின் லீவிட் கூறிய​தாவது: ரஷ்​யா, உக்​ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்ப் முயற்சி செய்து வரு​கிறார். இதுதொடர்​பாக ஐரோப்​பிய நாடு​களின் தலை​வர்​களு​டன் வியாழக்​கிழமை அவர் கலந்​தாலோ​சித்​தார். அதிபர் ட்ரம்​பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், ரஷ்​யா, உக்​ரைனுடன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். இந்த வார இறு​தி​யில் முக்​கிய அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற உள்​ளது.

ஆனால் ரஷ்​யா, உக்​ரைனின் செயல்​பாடு​கள் குறித்து அதிபர் ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்​துள்​ளார். எனவே அமைதி பேச்​சு​வார்த்​தை​யில் அமெரிக்க பிர​தி ​நிதி பங்​கேற்​ப​தா, வேண்​டாமா என்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது. இருதரப்பு பேச்​சு​

வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மான​தாக இருக்க வேண்​டும் என்று அதிபர் ட்ரம்ப் விரும்​பு​கிறார். அப்​போது​தான் சமரச முயற்​சி​யில்​ அமெரிக்​கா தீவிர​மாக ஈடு​படும்​. இவ்​வாறு கரோலின்​ லீவிட்​ தெரி​வித்​துள்​ளார்​.