இலங்கை ஜனாதிபதி கென்பரா சென்றடைந்தார்.

307 0

அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் கென்பரா நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு தங்கி இருக்கும் காலப்பகுதியில், பிரதமர் டேர்ன்புல் உள்ளிட்ட பலத் தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

இதன்போது பல்வேறு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவுஸ்ரேலிய அரச பல்கலைக்கழகம், கென்பரா பௌத்த விகாரை உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லும் ஜனாதிபதி, அங்குள்ள இலங்கையர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.