சிரியாவில் எறிகணை வீச்சு தாக்குதல்

396 0

olivier voisinசிரியாவின் எலப்போ நகரில் நேற்று இடம்பெற்ற எறிகணை வீச்சு சம்பவங்களில் சிறுவர்கள் பெண்கள் உட்பட்ட 30 பேர் வரை கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் தரப்பிலிருந்தே இந்த எறிகணை வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.

எலப்போ பிரதேசத்தின் மீது அரசாங்க படையினர் நடத்திய தாக்குதலையடுத்தே இந்த எதிர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்று இட்லிப் பிராந்தியத்தில் ரஷ்ய உலங்கு வானுர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டமையால் அதில் பயணித்த 5 பேர் பலியாமை குறிப்பிடதக்கது.