எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: முதல்வரிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

273 0

முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று முதல்வரை சந்தித்து, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் கடந்த சில தினங்களாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டும்படி முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்னர், 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்தினர்.