டைட்டானிக் (Titanic) கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் இதுவரை இல்லாத அளவு சுமார் 3 மில்லியன் வெள்ளிக்கு (1.78 மில்லியன் பவுண்ட்) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிகாரத்திற்குச் சொந்தக்காரரான இசிடோர் ஸ்ட்ராஸ் (Isidor Straus) டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஆகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர்.1912ஆம் ஆண்டு கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்கியபோது அவரும் அவரது மனைவி இடாவும் (Ida) மாண்டனர்.
அந்த அசம்பாவிதம் நடந்து சில நாள்களுக்குப் பின்னர் அவரது உடலும் சில பொருள்களும் மீட்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவற்றுள் ஒன்றுதான் அந்த 18 கேரட் தங்க பாக்கெட் கடிகாரம்.
கப்பல் மூழ்கியபோது கணவரைப் பிரிய மறுத்த திருவாட்டி இடா, உயிர்காப்புப் படகில் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் கணவர் பக்கத்தில் உயிர்பிரிய விரும்பியதாக நம்பப்படுகிறது.

