ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு

418 0

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது.

ஆளும் அரசாங்கத்தின் அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படும் நிலையில் இந்த விசேட சந்திப்பு இடம்பெறுகின்றது.

இதனிடையே, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று இரவு இடம்பெறவுள்ளது.

அதுபோல் ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் மத்திய செயற்குழுவும் இன்றிரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.