வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணி இராணுவத்தால் அபகரிக்கப்படுகின்றது

475 0

Vadduvalkkalமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவை கருதி சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலமாக பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நில அளவை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும் என்றும் அந்தப் பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமூகமளிக்குமாறும் அந்த அறிவித்தலில் கோரப்பட்டிருக்கின்றது. இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டிருக்கின்றது.