மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

22 0

கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்  என தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மின்சார ஹீட்டரை பயன்டுத்தியபோது,  அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொக்கவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.