பமுனுகம பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு

28 0

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபமுல்ல பகுதியில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையிலுள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று புதன்கிழமை (30)  மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கருப்புநிற சாரம் மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்ததாகவும், 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர் எனவும், சுமார் 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட மெலிந்த  நபர் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் சடலம் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.