யாழில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

64 0

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய செவ்வாய்க்கிழமை (28) யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொம்மை வெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றினர்.

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.