திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

43 0

மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் உள்ள மணிமண்​டபத்​தில் மருது சகோ​தரர்​கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்​சி​யாக நடை​பெற்​றது.

மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தேசி​யக் கொடியை ஏற்றி வைத்​து, மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, கே.ஆர்​.பெரிய கருப்​பன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், பழனிவேல் தியாக​ராஜன், சிவ.வீ.மெய்​ய​நாதன், டி.ஆர்​.பி.​ராஜா ஆகியோர் மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

பின்​னர், பேருந்து நிலை​யம் அருகே உள்ள மருது சகோ​தரர்​களின் நினை​வுத் தூணுக்கு மரி​யாதை செலுத்​தினர். இந்த நிகழ்ச்​சிகளில், எம்​எல்​ஏக்​கள் தமிழரசி, மாங்​குடி, எஸ்​.பி. சிவபிர​சாத் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.பின்​னர் அமைச்​சர் கே.ஆர்​. பெரியகருப்​பன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் தியாகத்​தைப் போற்​றும் வகை​யிலும், மொழி, கலாச்​சா​ரம், பண்​பாட்டை பெரு​மைப்​படுத்​தும் வகை​யிலும் மணிமண்​டபம், நினை​வுச் சின்​னங்​களை திமுக அரசு அமைத்து வரு​கிறது. சங்​கரபதி கோட்டை பழமை மாறாமல் புனரமைக்​கப்​பட்டு வரு​கிறது. ஆளுநருக்கு தமிழக வரலாறு குறித்து என்ன தெரி​யும்? இவ்​வாறு அவர் கூறி​னார்​.