திருகோணமலை ஸ்ரீ சண்முக மகளிர் கல்லூரி வன்முறைச் சம்பவத்தையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேரில் பார்வை

74 0

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி நேர வாகன நெரிசல் பிரச்சினைகள் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா செவ்வாய்க்கிழமை (14) நேரில் விஜயம் மேற்கொண்டார்.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு குறித்த விடயம் தொடர்பாகவும் நெரிசலைக் குறைக்கும் வாகன போக்குவரத்திற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.