யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று (9) உயிரிழந்துள்ளார்.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 69 வயதுடைய முதியவரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 5ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து கன ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
இவ்விபத்தில் கணவன் – மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கணவரே சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

