தமிழீழ இனப்படுகொலைக்கான 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்

275 0

தமிழர்களின் ஓலத்தை சுமந்து கொண்டிருக்கும் தமிழர் கடலின் ஓரம் நாம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களாய் ஒன்று கூடி நினைவேந்துவோம். அனைவரும் வாருங்கள். தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிப்போம். தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்த வாருங்கள். மே 21 , மாலை 4 மணி, தமிழர் கடல் (மெரீனா கடற்கரை), கண்ணகி சிலை பின்புறம்.

தோழர் திருமுருகன் அழைப்பு :

நாம் ஒருவருக்கொருவர் கைகோர்த்து நின்றால் தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்த அனைவரும் வாருங்கள் – தோழர் இயக்குநர் சமுத்திரக்கனி

தமிழீழ இனப்படுகொலைக்கு மே 21 அன்று தமிழர் கடலான மெரீனாவில் நடைபெறும் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்க வாருங்கள் – தோழர் சத்யராஜ்.