வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)

297 0

வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கந்தசாமி நகர் கிராமத்தை மெனிக்பாம் முகாமுடன் இணைக்கும் வகையில் வீதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

குறித்த வீதியில் அமைக்கப்படும் பாலத்திலேயே இவ்வாறான செயற்பாடு நடைபெறுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அமைக்கப்படும் பாலத்தின் கொங்கிறீற் வேலைகள் இரவு வேளைகளில் மட்டுமே நடைபெறுவதுடன், கொங்கிறீற்றுக்கு பயன்படும் மணலுடன் ஆற்றின் கரையில்; கட்டிட மற்றும் பால வேலைகளிற்கு பயன்படுத்தப்படாத மண்ணையும் கலந்து பயன்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.