கொழும்பு புறக்கோட்டையில் கட்டடம் ஒன்றில் தீ பரவல் !

45 0

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவல் இன்று சனிக்கிழமை (20) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.