கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது
அந்தவகையில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரத்தில் சிறப்புற நடைபெற்றது
புதுக்குடியிருப்பில் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு நகரில் ஈகைசுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.