தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை செயலணி முன்பாக பொது மகன் ஒருவர் !

361 0

K800_image4தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த பாதுகாப்பும், சுதந்திரமும் இப்போது இல்லை. மாலை 6 மணியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு முடங்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை வைத்துள்ளது.இவ்வாறு நேற்று கரவெட்டிப் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான செயலணி முன்பாக பொது மகன் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

K800_image6

இது தொடர்பாக அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- தமிழ் இனத்தை கருவறுக்கும் செயற்பாடுகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு தமிழ் மக்களை அடியோடு அழிப்பதற்காக நடந்தவை, தற்போது நடக்கின்றவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்விசாரணைகள் உள்நாட்டு விசாரணைகளாக இருக்கக் கூடாது. உள்நாட்டு விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இங்கு என்ன விசாரணை நடந்தாலும் தமிழ் மக்கள் தான் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள் என்பதே உண்மை.

K800_image5

குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் தமிழ் மாணவர்களே குற்றவாளிகளாக காட்டப்படுகின்ளனர். ஆனால் இம்மோதல் சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிங்கள மாணவர்களே தடிகளுடன் நிற்கின்றார்கள். இது போன்று தமிழ் மக்களை குறை செல்லுகின்ற விசாரணைகளே உள்ளக விசாரணைகளாக இருக்கும்.நாட்டில் என்ன நடந்தாலும் அழிவு, கஸ்ரம், துன்பம், தொல்லலை எல்லாம் தமிழ் மக்களையே வந்தடையும்.

K800_image3

1948 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் சிங்கள மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் மட்டுமே. தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை.அன்று தொடக்கும் இன்று வரை மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் சிங்கள மக்களிடம் இருந்து தமது ஆட்சியினை பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியல் தமிழர்கள் தான் அழிக்கப்படுகின்றார்கள்.சுதந்திரமான கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலையில் தான் தமிழர்கள் இன்றும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள் என்றார்.

K800_image2 K800_image1