பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சடலமானது நீண்ட நாட்களாக பெந்தர ஆற்றில் மிதந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

