தங்காலை இரட்டை கொலை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது!

42 0

இரட்டை கொலை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த வீதிப் பகுதியில் 24.06.2025 அன்று இடம்பெற்ற இரட்டை கொலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டபோதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (08) விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மில்லிமீற்றர் 09 ரக துப்பாக்கி, மில்லிமீற்றர் 09 ரக 53 வெடிமருந்துகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக 25 வெடிமருந்துகள், 04 வெடிமருந்துகள் எண் 45 எனக் குறிக்கப்பட்டுள்ளன, 19 வெடிமருந்துகள் வகை T56, 02 வெற்று தோட்டாக்கள்,ஒரு ஜோடி கைவிலங்கு மற்றும் 300 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.