ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

222 0

ஒரு கோடிக்குக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் முந்தலம், சின்னப்பாடுவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தலம் பொலிஸருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சின்னப்பாடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவும் 50 கிராம் நிறையுடைய போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.