பயாகல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது !

43 0

பயாகல பொலிஸ் பிரிவின் குடா பயாகல பகுதியில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பயாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 01 கிலோ 175 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.