7 வது நாளை கடந்து யேர்மன் தலைநகரை அண்மிக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

425 0

தமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 7 வது நாளாக இன்று காலை Bielefeld நகரையும் மாலை Hannover நகரையும் ஊடறுத்து தலைநகர் பேர்லினை நோக்கி பயணிக்கின்றது. இன்றைய நாளில் Bielefeld மற்றும் Hannover நகரில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கண்காட்சி பதாதைகளை நிறுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கி சிறிய உரையாடல்களின் ஊடாகவும் தமிழின அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு Bielefeld நகரினில் நகர முதல்வரின் அலுவலகத்தில் மனுக்கையளிப்பும் அத்தோடு நகர பல்லின மக்களுக்கான ஒருங்கிணைப்புச் சபையின் பொறுப்பாளர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றது இனவழிப்பு என அங்கீகரிக்க கோரியும் மனு கையளிக்கப்பட்டது. நாளைய தினம் பேர்லினில் Brandenburger Tor முன்பாக கண்காட்சி வைக்கப்பட்டும் , இறுதியாக வெளிவிவகார அமைச்சில் முக்கிய சந்திப்பும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.