தேசிய மீளாதுன் நபி விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

52 0

2025 ஆம் ஆண்­டிற்­கான தேசிய மீலாத் விழா செப்­டெம்பர் மாதம் 25ஆம் திகதி அம்பலாந்­தோட்டை போலான மஸ்­ஜிதுல் அரூசியா ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மையில் நடை­பெற­வுள்­ளது.

புத்தசாசன மத மற்றும் கலாசார நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கும்  முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய மீளாதுன் நபி விழா இந்த வருடம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி அம்பலாந்­தோட்டை போலான மஸ்­ஜிதுல் அரூசியா ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இடம்பெறவுள்ள இவ்விழா தொடர்பான மீளாய்வு கூட்­ட­ம் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையில் கடந்த தினம் அம்­பாந்­தோட்டை மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

இதில் அம்பாந்தோட்டை மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நிஹால் கலப்­பதி, மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அர்கம் இல்யாஸ், முஸ்லிம் சமய விவ­கார திணைக்­கள அதி­கா­ரிகள், பாது­காப்பு தரப்­பினர் உள்­ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.

அத்­துடன், தேசிய மிலாத் விழா நடை­பெற உள்ள அம்­ப­லாந்­தோட்டை பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட போலான கிரா­மத்தில் உள்ள மஸ்­ஜிதுல் அரூ­சியா ஜும்ஆ பள்­ளி­வா­சலின் வளா­கத்தை பிர­தி­ய­மைச்சர் முனீர் முழப்பர் மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.