COPA குழுவின் புதிய தலைவர் யார்?

48 0
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக, செப்டம்பர் 12 ஆம் திகதி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

கோபா குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போது அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.

அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்