கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட நபர் காப்பாற்றப்பட்டார்

51 0

எத்துகால பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட  நபர் உயிர்காப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய நபர் தலுபொத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் எத்துகால கடற்கரை நீச்சலடிக்கச்  சென்ற போது கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்ட வேளை இதன் போது விரைந்து செயற்பட்ட உயிர்காப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.