மோடியின் அதிகாரம் குறித்து உதய கம்மன்பில கேள்வி

323 0

மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகளையும், நோயாளர் காவு வண்டிச் சேவையை இலங்கை முழுவதும் வழங்க இந்தியப் பிரதமர் மோடிக்கும் இருக்கும் அதிகாரம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சித் தலைமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டதனூடாக, எட்கா உடன்படிக்கையை விரைவில் கைச்சாத்திட வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தியுள்ளதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.

மேலும், இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக கருதியே மோடி இங்கு உரையாற்றியதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.