இதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
செம்மணி சித்துபாத்தி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப்புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கையாகும்.
பல தசாப்தகாலமாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது, திடமாக பதில்களைத் தேடிவரும் காணாமல்போனோரின் குடும்பங்களுடன் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதியாக நிற்கிறது. உண்மை மற்றும் நீதியைப் பின்தொடர்வதில் அவர்களது தாங்கும் வல்லமை ஒரு தார்மீக வழிகாட்டியாகத் தொடர்கிறது.
இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தமது பணியை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும், காணாமல்போனோரின் குடும்பங்களுடனான அர்த்தமுள்ள ஆலோசனைகளுடனும் நிறைவேற்றவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

