உலகளவில் பல்வேறு காரணங்களால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
இதில், குழந்தையை வளர்க்க அதிக செலவாகுவதால் தம்பதியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.
இதனை ஈடுகட்ட, பல்வேறு நாடுகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
இதே போல் ஜெர்மனியும், கிண்டர்ஜெல்ட் கொள்கை மூலம் குழந்தை வளர்ப்பிற்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் விளையாட்டுத்தனமாக வீடியோவில் இந்த திட்டம் குறித்து விளக்கினார்.

