பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி!

50 0

குருணாகல் – நாரம்மல வீதியில் பிலகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகலில் இருந்து நாரம்மல நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலுகமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் வீரம்புகெதர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.