கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு ; இளைஞன் பலி

62 0

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடானது இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஆமை வளர்ப்பு நிலையத்தின்  உரிமையாளரின் மகன் அருத் மென்டிஸ் என தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.