இசை நிகழ்வுக்குச் சென்ற இளைஞர் வீட்டினருகில் சடலமாக மீட்பு – யாழில் சம்பவம்

63 0

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வுக்குச்  சென்ற இளைஞர் ஒருவர், அவரது வீட்டினருகில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த 27 வயது  இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) இரவு சென்ற இளைஞர், இரவு வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை (30)அதிகாலை வீட்டிற்கு அருகில் இளைஞன் மூச்சற்றுக் கிடப்பதை அவதானித்த அயலவர்கள் வீட்டாருக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், இளைஞனை மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வேளையில், இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.