அநுராதபுரத்தில் எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகா இலுப்பல்லம பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மகா இலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
இவர் வாழைத்தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

