2001 ஆம் ஆண்டு ஜூலை 24 — இலங்கை அரசுக்கும் அதன் விமானப்படைக்கும் இதயம் துடிப்பதை நிறுத்திய, வரலாற்றின் மிக முக்கியமான ஒரு நாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் 14 மறைமுக கரும்புலி வீரர்கள் இலங்கை அரசின் இராணுவ மற்றும் பொருளாதார மூச்சுக்குழாயாக இருந்த கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தையும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தையும் ஒரே நேரத்தில் தாக்கிய நிகழ்வு, இலங்கை அரசின் சக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்பில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.
✦. தாக்குதலுக்கான பின்னணி
இந்த தாக்குதலின் முழுமையான தந்திரச் சூழ்ச்சியையும் திட்டமிடலையும் தமிழீழ தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலிகள் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் முன்னெடுத்தனர். இந்த ஒத்திகை நுட்பங்களை செயலாக்கி, பயிற்சியளித்து, இறுதிக்கட்டத்திலும் முன்னிலை வகித்தவர் விடுதலைப்புலிகள் திட்டமிடல் தளபதி கேணல் சார்ல்ஸ் ஆவார்.
✦. தாக்குதலின் நாள் மற்றும் முன்னோட்டம்
2001 ஜூலை 23: மாலை 8:30 மணியளவில், 14 கரும்புலிகள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி இறுதி ஆலோசனையை மேற்கொண்டனர்.
இரவு 9:45 முதல் 11:15 – மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த ஒளி இருட்டில் அவர்கள் முன்னேறும் பாதையையும் தாக்குதலுக்கும் நிலை அமைப்பையும் மதிப்பீடு செய்தனர்.
ஜூலை 24 அதிகாலை 3:30 – துல்லியமாகத் திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடங்கப்பட்டது.
காலை 8:30 – தாக்குதல் நிறைவுற்றது.
✦. தாக்குதலால் ஏற்பட்ட சேதம்
ஈழநாதம் வெளியிட்ட தகவலின்படி:
முழுமையாக அழிக்கப்பட்ட விமானங்கள்:
✈ 2 x A-340-300
✈ 1 x A-330-200
✈ 4 x கிபிர் போர் விமானங்கள்
✈ 3 x K-8 பயிற்சி விமானங்கள்
✈ 2 x MiG-27 ஜெட் விமானங்கள்
2 x Bell 412 உலங்குவானூர்திகள்
2 x VVIP Bell 412 உலங்குவானூர்திகள்
2 x MI-17 உலங்குவானூர்திகள்
சேதம் அடைந்தவை:
✈ 2 x A-320
✈ 1 x A-340
✈ 1 x Antonov
1 x Mi-24
1 x Bell 412
✈ 4 x கிபிர் போர் விமானங்கள்
✦. பொருளாதார விளைவுகள்

இத்தாக்குதலால் இலங்கை அரசுக்கு நேர்ந்த சொத்துச் சேதம் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் என கூறப்பட்டது.
அதே நேரத்தில், விமானப் போக்குவரத்துக்கு மரணஅடியாயம் ஏற்பட்டது. சுற்றுலா வர்த்தகம் முற்றாக பாதிக்கப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதாக உலகிற்கு அறிவிக்கப்பட்டபோது, கொழும்பு முழுவதும் பீதி பரவியது.
✦. வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 14 கரும்புலிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து, இலங்கை அரசுக்கு ஒரு பெரும் சோதனையை ஏற்படுத்தினர். உயிரைப் பொருட்படுத்தாமல் முப்பது ஆண்டுகள் போராடிய எமது மாவீரர்களின் தியாகம், இந்த நிகழ்வின் ஊடாக உலகத்திற்கு விளக்கமாயிற்று.
✦. வெறும் தாக்குதல் அல்ல – ஒரு அரசியல் செய்தி
இந்த தாக்குதலின் பின்னணியில் 1983 “கறுப்பு யூலை” மாதத்தின் தாக்கம் உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட, சிங்கள அரசால் திட்டமிட்டு தூண்டப்பட்ட கொடூர படுகொலைகளுக்கான பதிலடி இது. “சிங்களனுக்கு புரிந்த மொழி திருப்பி அடிப்பது தான்” என தீர்மானித்த தமிழீழ விடுதலைப்புலிகள், அந்த திருப்பி அடிப்பது என்பதன் சின்னமாகவே கட்டுநாயக்கா தாக்குதலை மாற்றியமைத்தனர்.
✦. பிரபாகரனின் ஒழுக்க போர் வியூகத்தை உணர்த்திய நாள்
இத்தாக்குதல், சாதாரண சிங்கள மக்களை இலக்காக்காமல், அரசின் இராணுவ மற்றும் பொருளாதார ஆளுமையை அழித்து விடுதலைக் குரலை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. பாலியல் வன்முறை, பொதுமக்கள் படுகொலை ஆகியன எதுவும் நிகழக்கூடாது என்று தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுதிய விதிகள், போராளிகளின் ஒழுக்கத்தை எடுத்துரைத்தன.
✦. முடிவுரை: ஒரு பொற்கால வீர நினைவாக...
2001 ஜூலை 24 – சிங்கல அரசை அதிர வைத்த நாள்.
2001 ஜூலை 24 – தமிழீழத்தின் படைதிறனை உலகிற்கு உணர்த்திய நாள்.
2001 ஜூலை 24 – தமிழரின் தியாகத்தை வரலாற்றில் பொற்கொடியாக நிரூபித்த நாள்.
இந்த தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும், 1983 இல் கறுப்பு யூலையில் சிங்கள அரசால் கொல்லப்பட்ட எம் உடன்பிறப்புகளுக்கும், மனம் கனியும் வீர வணக்கம்.
✧✧✧
✍ எழுதியவர்: ஈழத்துநிலவன்
(தமிழீழ வரலாற்றை எதிர்கால தலைமுறைக்கு பதிவு செய்யும் பணியில்…)

