கேகாலையில் அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபத்கமவத்த பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
அரநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை , நெலும்தெனி பகுதியை சேர்ந்த 69 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

