இளம் பெண்ணொருவர் தனது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த காதலன் தனது கழுத்தையும் அறுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இச் சம்பவம் அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியில் புதன்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் காதலியின் வீட்டிற்கு சென்ற காதலன், காதலியின் தாய் மற்றும் தந்தை மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 23 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

