எதிர்வரும் 24 25;ம் திகதிகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நேசிக்கின்ற எவரும் உங்கள் வீடுகளில் இருந்து வருகின்ற போது இதயசுத்தியோடு ஒரு துளிநீரையாவது கொண்டுவந்து விடுதலை விருட்சத்தினை நாட்டுவதற்கு உதவுங்கள் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல்..!(19.07.2025) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
இம்மாதம் 24,25 சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும் அதற்கான நூதனப் போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் நடத்தப்பட்டது.
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது 8 மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நாட்வதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது.
எதிர்வரும் 24, 25 ஆகிய தினங்களில் உங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் ஒரு சிறு துளி நீரையாவது சேகரித்து அவற்றை விடுதலை விருட்சம் நாட்டுவதற்கு பயன்படுத்த முடியும்.
இன விடுதலைக்காகவும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காகவும் குறித்த விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.
இது குறித்து குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் 2425 திகதிகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நேசிக்கின்ற எவரும் உங்கள் வீடுகளில் இருந்து வருகின்ற போது இதயசுத்தியோடு ஒரு துளிநீரையாவது கொண்டுவந்து அங்கே வைக்கப்படும் எங்களின் பொதுவான குவளையில் தரும் பட்சத்தில் விடுதலை விருச்சத்திற்கு நீர் பாய்ச்சப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இனவிருட்சம் என்பது தமிழர்களின் இனவிடுதலையையும் அரசியல் கைதிகளின் விடுதலையையும் குறிக்கின்ற ஒரு குறீயீடு.
இதனை ஒரு பிரதானமான செயற்பாடாக தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
தொடர்ந்து மக்களின் ஆதரவுகளை எதிர்பார்ப்புகளை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
முப்பது ஆண்டுகளாக தொடர்ந்தும் இன்றுவரை சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல்கைதிகளிற்கு உங்களுடைய ஒத்துழைப்பு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.அதேவேளை அரசாங்கத்திற்கும் ஒரு செய்தியை சொல்லும்.
மக்கள் அணிதிரளும் பட்சத்தில் அது விடுதலை கதவுகளை திறப்பதற்கான ஒரு வழியாக அமையும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

