சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது !

76 0

 

கிரிந்திவெல பொலிஸ் பிரிவின் ரங்வல பகுதியில்  அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல்  அகழ்வில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (19) 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 42 வயதுக்குட்பட்ட கஹவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 

 

இரத்தினக்கல்  அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.