திறப்பனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் திறப்பனை, லபுநொருவ பிரதேசத்தில் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெளிநாட்டுத் துப்பாக்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

