ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்கள் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை, பெல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 67 லீற்றர் 500 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் (90 போத்தல்கள்) மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

